Police Department News

மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலை அழகுபுரம் 3 வது தெருவில் வசிக்கும் கரீம் பாய் மனைவி மும்தாஜ் வயது 40/21, இவர் தனது தாய் ஜெய்துன்பீபி வயது 75,/21, மற்றும் மகன் சதாம் உஷேன் மருமகள் பிஸ்மிநிஷா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் வசித்து வருகிறார். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இவரது தாயார் ஜெய்துன்பீவி வயது 75/21, அவர்கள் இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு தனக்குத் தானே பேசி கொண்டிருப்பார் அதனால் அவரை அண்ணாநகர் மனநல மருத்துவ மனையில் சிகிச்சை செய்து, வீட்டிலேயே பத்திரமாக கவனித்து வந்தனர், இந்த நிலையில் இவர் கடந்த 2 ம் தேதி காலை 6 மணிக்கு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவே ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலையத்தில் இவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளிக்கப்பட்டது, புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் C சோமசுந்தரம் அவர்கள் வழக்கு பதிவு செய்து இவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.