Police Department News

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கோட்டம், காவல் துறையினரின் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் மேளா

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கோட்டம், காவல் துறையினரின் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் மேளா

விருதுநகர் உட்கோட்டம் மேற்கு, கிழக்கு, புறநகர், பஜார், சூலக்கரை, வச்சகாரபட்டிஆமந்தூர் ஆகிய ஏழு காவல் நிலையங்களில் கடந்த 5 வருடங்களில் பதிவான காணாமல் போனவர்கள் 28 பேரில் ஆண் 13, பெண் 15, ஆகியவர்கள் பற்றிய மேளா எஸ்.எஸ்.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மதுரை சரக காவல் துணைத்தலைவர் காமினி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மேற்பார்வையில் இந்த மேளாவை தொடங்கி வைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் அருணாசலம் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள் 5 சார்பு ஆய்வாளர்கள், 20 காவலர்கள் இந்த மேளாவில் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற இந்த மேளாவில் மூன்று நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.