Police Department News

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

வீரவநல்லூர் காவல் நிலையத்தில், அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் எதிரியான சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர், நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன் சிவா என்ற ராக்கி சிவா(25) அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,10.08.2021 இன்று எதிரி குண்டர் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.