Police Department News

மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது

மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சந்திரமெளலி அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நான் ஜாதி இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு, எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப் பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன், மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியல் அமைப்பு சட்டம் வழிமுறைகளை பின் பற்றி தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன். என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.