Police Department News

பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !!

பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !!

குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலரை கொடூரமாக கொலை செய்த கணவர் சிக்கினார்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் பானுப்பிரியா (30).

இவரது கணவர் விக்னேஷ் (35). விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷ் தனது மனைவியை மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்குவதற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு பானுப்பிரியா மறுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பானுப்பிரியாவை பெல்டால் கழுத்தை நெரித்து விக்னேஷ் கொலை செய்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் பெண் போலீஸ் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக அவரது கணவர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.