Police Department News

அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.

அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.

முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கம்பாறையை சேர்ந்த ஜான்கென்னடி வயது 40, என்பவர் வம்பழந்தான் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.21.08.2021 அன்று ஹோட்டலுக்கு வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஆனைக்குட்டி @ மணிகண்டன் வயது,20, மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் மேற்படி நபர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜான் கென்னடியை அரிவாளால்‌ வெட்ட வரும் போது, அங்கு வேலை செய்த சகாயபிரவின் தடுத்துள்ளார்,பின் சகாயபிரவினை தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல், விடுத்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜான்கென்னடி முக்கூடல் காவல் நிலையத்தில், புகார் அளித்ததன் அடிப்படையில் சுத்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.அனிதா
(பொறுப்பு) அவர்கள் விசாரணை மேற்கொண்டு , கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனைக்குட்டி என்ற மணிகண்டன்வயது 20 மற்றும் இசக்கி பாண்டி என்ற கார்த்திக்வயது 21 ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.