Police Department News

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை

மதுரை, திருநகர் W1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் கடந்த 22 ம் தேதி மாலை 5.30 மணியளவில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாலகுமரன், மற்றும் பழனிச்சாமி ஆகியோர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனக்கன்குளம் பஸ் ஸடாப் அருகில் சென்ற போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கே நின்றிருந்த நபர் போலீசாரை பார்த்ததும் ஓட எத்தனித்தார், சுதாரித்து கொண்ட போலீசார் அவரை வளைத்து பிடித்து விசாரித்த போது அவர் தனக்கன்குளம் நேதாஜி நகர் பாண்டியன் மகன் காசிராஜன் வயது 30/21, என தெரிய வந்தது அதன்பின் அவரை சோதனை செய்த போது அவரிடம் மதியை மயக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 250 கிராம் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது, உடனே அதை பறிமுதல் செய்து குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.