Police Department News

மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சட்டம் ஒழுங்கை பராமரித்து விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையமாக மநிலத்தில் 12 வது இடத்தைப் பெற்று விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதற்கான விருதுவை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளர் திரு. விஜய்பாஸ்கர் அவர்களிடம் வழங்கினார். அப்போது உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்ததுடன் வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.