Police Department News

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர்

திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 27/21, இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சமத்துவபுரத்தை சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது என்பவரது மகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடந்து அந்த இருவரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார

இதனை தொடரந்து பாலமுருகனை கொலை செய்து விடுவதாக ஜாபர் ராஜாமுகமது அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் பாலமுருகன், இதனை கண்ட பொதுமககள் பாலமுருகனை மீட்டு திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.