Police Department News

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தாக்கலான 4 கணினி திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த எதிரியான செந்தில்குமார், த/பெ. அய்யர், நாகமலை புதுக்கோட்டை, என்பவரை கைது செய்து மேற்படி வழக்குகளில் களவு போன சொத்துகககளான கம்பூட்டர் மாணிட்டர் 6, சிபியூ 6, கேமரா 1, ஆகியவற்றை மேற்படி எதிரியிடமிருந்து கைப்பற்றினர்.

சீரிய பணிகளை செய்து வழக்குகளை கண்டுபிடித்த உட்கோட்ட தனிப்படையினரை மதுரை காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் IPS., அவர்கள் பாராட்டினர். மேலும் இது போன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.