Police Department News

காரில் ஆயுதங்களுடன் வந்து அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.

காரில் ஆயுதங்களுடன் வந்து அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.

நெல்லை, மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறுகால்குறிச்சியை சேர்ந்த முருகன் வயது 40 என்பவர் நேற்று 9 ம் தேதி சிங்கிகுளத்திலுள்ள உறவினரை பார்க்க பாணான்குளத்திலிருந்து சிங்கிகுளம் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சுடலை கோவில் அருகே காரில் வந்த பூலம், மேல தெருவைச் சேர்ந்த சிவன்பாண்டி வயது 28, கொம்பையா வயது 47 பழனிகண்ணன் ஆகிய மூவரும் முருகனை வழிமறித்து, காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மறுகால்குறிச்சிகாரனுக்கு இங்கு என்ன வேலை என்று அவதூறாகப்பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகன் மூன்றடைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் திரு. காளியப்பன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு, முருகனை வழிமறித்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சிவன்பாண்டி மற்றும் கொம்பையாவை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.