Police Department News

அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மாரிராஜ் என்ற ராசுகுட்டி வயது (22) என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், திருமதி.சுகாதேவி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 16.09.2021 இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.