Police Department News

24.09.2021 சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை

24.09.2021
சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை

குடிபோதையில் சிறு சிறு முன்விரோதம் காரணமாக தீபக் என்ற சீமைக்காளை என்பவர் கத்தியால் வெட்டியதில் காளிமுத்து என்பவர் சம்பவ இடத்தில் இறந்தது சம்பந்தமாக
நாள்:24.09.21/21.40
இடம் : அம்பேத்கர் குடிசை பகுதி, கே கே நகர், சென்னை – 78.

24.09.2021 தீபக் (எ )சீமக்காளை குடிபோதையில் ஏற்பட்ட முன்விரோத காரணமாக காளிமுத்துவை சரமாரியாக தலை ,கை, கால் ,தோல் பட்டை, போன்ற இடங்களில் கத்தியால் வெட்டியதின் அடிப்படையில் காளிமுத்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.தகவல் அறிந்த R10 காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.பலவேசம்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் காவல்துறை குழுவினருடன் விரைந்துவந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக மருத்துவமனைக்கு அனப்பிவைக்கப்பட்டனர். கத்தியால் வெட்டிய தீபக் என்கிற சீமக்காளையை கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் திவால் இ.கா.ப உத்தரவுபடி கொலை வழக்கு சம்பந்தமான சட்ட வழக்கு எண்கள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

இறந்தவர் : காளிமுத்து வயது 35 த/பெ சீனிவாசன் டாக்டர் அம்பேத்கர் குடிசை பகுதி, கேகே நகர் அரசு மருத்துவமனை பின்புறம், சென்னை-78

எதிரி:
தீபக் (எ) சீமகாளை ஆ/26
த/பெ முருகேசன் அம்பேத்கர் குடிசை பகுதி, கே கே நகர், சென்னை – 78.

Leave a Reply

Your email address will not be published.