Police Recruitment

குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த திண்டுக்கல் போக்குவரத்து போலீசார்

   திண்டுக்கல் மாவட்டம்  இன்று 16.11.2019   ஒட்டன்சத்திரம் பேருந்து  நிலையம் அருகே சாலைகள் குண்டும் குழியுமாகவும், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாகவும், சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதனை யறிந்த ஒட்டன்சத்திரம் போக்குவரத்து போலீசார் SIதிரு.நல்ல சாமி, அவர்களுடன் HC-1188 திரு.பாலன், HC-589 திரு.சூர்யா, அவர்கள் ஒன்று சேர்ந்து  அயராத பணியிலும் மக்களின் நலன் கருதி குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்க தேவையான  மண்ணை சேகரித்து ஜேசிபியின் உதவியுடன் சாலையை சீரமைத்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிற்காமல் இரு பக்கமும்  கயிறுகளை  கட்டி  அதற்குள் வாகனங்கள் நிறுத்து வண்ணம்  போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். இதனையறிந்த பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.