Police Department News

மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுபகபடுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்களின் தலைமையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 23.09.2021 ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒரு தனிப்படையும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் ரவுடிகளின் இருப்பிடம் தணிக்கை செய்யப்பட்டது. அதில் பல ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு உட்படுதகதப்பட்டனர். மேலும் பல ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்பட்டு ரவுடிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி 5 ம் தேதி வெகுமதிகள் வழங்கினார்.

மேலூம் ரவுடிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும் அவர்களின் மீது சட்டப்படியான பிரிவின் மீது வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.