Police Department News

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்தில் தகராறு காராணமாகவும் சிறப்பு உதவவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பு உள்ளது இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இதில் இருந்து வருபவர் கௌதம் சென்னை ஆயுதப்படை சிறப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

மேலும் கௌதமுக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து இன்று காலை அவர் வைத்திருந்த துப்பாக்கியால் படுக்கை அறையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றி தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 வயதான கௌதமன் தனக்கு ஓய்வு கிடைக்க வில்லை என்றும் குடும்ப பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுகிறது உடற்கூறு ஆய்வுக்காக உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.