Police Department News

வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:

வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மரணமடைந்தது நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் மேலே குறிப்பிட்டப் படி திருமணமாகிய பின் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்:

திருமணமான பெண்ணிடம் அவரது கணவர், அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் சட்ட விரோதமாக வரதட்சணை என்ற பெயரில் பணம், பொருள், நிலம் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கேட்டு துன்புறுத்தினால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

என்ன மாதிரியான துன்புறுத்தல் என்றால்:

பெண் தற்கொலை முயற்சிக்கு செல்லும் வகையில்: அல்லது

பெண்களின் உடலில் தீ உள்பட காயம் ஏற்படும் வகையில் துன்புறுத்துவது: அல்லது

பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது, உடல் உறுப்புகள் இழக்கும் வகையில் தாக்குவது, மனதளவில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது: அல்லது பெண்ணை நிம்மதியாக இருக்க விடாமல் வார்த்தைகளால் அவமதிப்பு செய்வது: அல்லது
பெண்ணிடம் அவரது கணவர், அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் சட்ட விரோதமாக வரதட்சணை என்ற பெயரில் பணம், பொருள், நிலம் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கேட்டு துன்புறுத்துவது. மனைவியை மட்டுமில்லாமல் அவளது பெற்றோர் மற்றும் ரத்த சம்மந்தமான உறவினர்களை நிந்திப்பது.

திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு மணமுடித்த நாள் முதல் 7 ஆண்டுகளுக்குள் தீக்காயம், கொலை செய்யப்படுத்தும் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது. ஒரு கட்டத்தில் வரதட்சணை கொடுமையால், பெண்ணை கொலை செய்வது அல்லது தற்கொலை செய்து கொள்ளும் வகையில் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இம்சை கொடுத்ததை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 113 (பி) அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் மரணமடைந்தால், அந்த மரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்தின் பின்னால் வரதட்சணை கொடுமையால், பெண்ணை கொலை செய்வது அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் வகையில் உ.டல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இம்சை கொடுத்ததை நீதி மன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 113 (ஏ) அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

வரதட்சணை சட்டம் எப்படி பின்பற்றுவது:

வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசால் கடந்த 1961ம் ஆண்டு இந்திய வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் 8வது பிரிவில் கீழ் வரதட்சனை புகாரை விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்து கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இச்சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனுதியும், ஆலோசனையும் வழங்க கர்நாடகாவுக்கு தனி அதிகாரமும் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி மாநில அரசு கர்நாடக மாநில வரதட்சணை தடுப்பு சட்டம்-2004 அமல்படுத்தி கடுமையான நிபந்தனைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

இச்சட்டத்தின்படி வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண் அல்லது அவரது பெற்றோர், ரத்த சம்மந்தமான உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வு தொண்டு அமைப்புகள் கூட பாதிக்கப்பட்ட பெண் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். மேலும் இச்சட்டத்தை முழுமையாக செயல்பட கீழ் காணும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

வரதட்சனை கொடுமை தொடர்பாக பெண் கொடுக்கும் புகாரை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்று பதிவு செய்ய வேண்டும்.

வரதட்சணை புகார் கொடுத்த மாத்திரத்தில் நடவடிக்கை எடுக்காமல் விண்ணப்பத்தை சரியாக படிக்க வேண்டும். இது தொடர்பாக பல தரப்பில் விசாரணை நடத்த வேண்டும். இதில் புகார் கொடுத்த பெண்கள் கூறியுள்ளது விசாரணையில் உண்மை என்பது தெரியும் பட்சத்தில் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதுபோன்ற புகார் ஏற்கனவே பதிவாகி இருந்தால், அவ்வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் சமயத்தில் அரசுக்கு ஆதரவான அம்சங்களை தெரிவிக்க வேண்டும். மனுதாரருக்கு நியாயம் கிடைக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வரதட்சணை புகாரை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கும் முடிக்க விசாரணை அதிகாரி முடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.