Police Department News

மதுரை, மேலூர் அருகே நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் வாகன விபத்தில் மரணம்

மதுரை, மேலூர் அருகே நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் வாகன விபத்தில் மரணம்

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ஆசிக்அலி(21). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த 2 வருடங்களாக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 2-வது முறையாக தேர்வு எழுதிய முகமது ஆசிக் அலி, தேர்வு முடிவிற்காக காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், முகமது ஆசிக் அலி, அதே பகுதியை சேர்ந்த முகமது உவேஷ்(18) என்பவருடன் இன்று அதிகாலை தும்பைப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மேலூர் – திருச்சி 4 வழிச்சாலை சென்றபோது முகமது ஆசிக்அலியின் வாகனம் மீது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், வாகனத்தில் தூக்கிவீசிப்பட்டதில் பலத்த காயமடைந்த முகமது ஆசிக் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த முகமது உவேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முகமது ஆசிக் அலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார், மேலும், இந்த விபத்து குறித்து மேலூர் காவல் ஆய்வாளர் திரு. சார்ளஸ் அவர்கள வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.