Police Department News

மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு. வெம்புலு அவர்கள் காவலர்களுடன் சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை விளாங்குடி விசாலாட்சி மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட ஆரம்பித்தனர் உடனே சுதாரித்து கொண்ட சார்பு ஆய்வாளர் திரு.வெம்புலு அவர்கள் அவர்களை விரட்டிச் சென்றார் அதில் ஒரு தபபி விட மற்றொருவனை பிடித்து விசாரித்ததில் அவன் மதுரை பரவைமேல வெளி தெருவை சேர்ந்த சந்தானம் மகன் பிரபு வயது 35/2021, என தெரிய வந்தது, தப்பி ஓடியவன் மதுரை விளாங்குடியை சேர்ந்த முனியசாமி மகன் ராஜ்குமார் என தெரிய வந்தது, மேலும் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட மதியை மயக்கி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கஞ்சா 1.200 கிலோ விற்பனைக்காக வைத்திருந்தார்கள் உடனே அதையும் கஞ்சா விற்று கையில் வைத்திருந்த பணம் 300/− மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றி பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.