Police Department News

தூத்துக்குடி மாவட்டம தாளமுத்துநகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம தாளமுத்துநகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

தாளமுத்துநகர் மாதா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாராஜன் (42). இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 24.10.2021 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அந்த இருச்சக்கர வாகனம் திருடு போயுள்ளது.

இதனையடுத்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் முகமது (21) என்பவர் மேற்படி மகாராஜனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சரண்யா வழக்கு பதிவு செய்து எதிரி பீர்முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.