Police Department News

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் தனியார்துறை பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது குறித்தும், விபத்து பகுதிகளில் சிக்கிய நபர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர்ஆண்டவராஜ், தீயதைப்பு வீரர்கள், கோவில் பணியாளர்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.