Police Department News

சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி

சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி

சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு பெய்த மழை இன்று காலை வரை பெய்து வருகிறது.இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காணப்படுவதுடன் ஆங்காங்கே மரங்களும் சாலைகளில் சாய்ந்து கிடப்பது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்த பெரிய மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த கவிதா வயது 40 என்ற பெண் காவலர் உயிரிழந்துள்ளார். மற்றொரு போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் பெண் காவலர் உயிரிழந்ததை அறிந்த தலைமை செயலாளர் இறையன்பு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.