Police Department News

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக பணிபுரிந்துவந்த திரு.துளசிதாஸ் மற்றும் திரு.ராமு ஆகியோரை 04.10.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார் மற்றும் காயமடைந்த திரு.ராமு அவர்கள் மருத்துவசிகிச்சை பெற்றார். இது சம்மந்தமாக ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யபபட்டது. இவ்வழக்கின் எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறைத்தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் ஒரகடம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மற்றும் செல்போன் எண்களை வைத்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவு மற்றும் அறிவியல் பூர்வமான தகவலின் அடிப்படையிலும் தனிப்படையினர் பீகார் மாநிலம் சென்று அம்மாநில காவல்துறையின் உதவியுடன் எதிரி உமேஷ்குமார் ( 25 ) த / பெ.மோகன்குமார், ஹவ்காரா கிராமம் கைமூர் மாவட்டம், பீகார் மாநிலம் என்பவரை கைதுசெய்து ஒரகடம காவல்நிலையம் அழைத்துவரபபட்டு. 05.11.21 தேதி மேற்படி எதிரி உமேஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதி மன்ற காவலில் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைதுசெய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.