Police Department News

படு மோசமான சாலைகளை உடனே பராமரிக்க நெல்லை பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வேண்டுகோள்

படு மோசமான சாலைகளை உடனே பராமரிக்க நெல்லை பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வேண்டுகோள்

நெல்லை பேட்டை ரயில்வே கேட் முதல் சுத்தமல்லி விலக்கு வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆம்புலன்சில் செல்லுவோர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர், இந்த படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்லுவோர்கள் தவறி கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலோ மேற்படி சாலையை கவனக்குறைவாக சரியாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாகத்தான் விபத்து நடந்துள்ளது என்று கருதி உயர் அதிகாரிகளிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது மோசமான சாலைகளை சரி செய்வதில் கவனக்குறைவாக சரியாக பராமரிங்காமல் விட்டதன் காரணத்தால்தான் விபத்து நடந்துள்ளது என்று கருதி அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என பேட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.