![](http://policeenews.com/wp-content/uploads/2022/04/IMG-20220413-WA0000-1-569x1024.jpg)
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபரை தாக்கிய 3 நபர்கள் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் தங்ப்பாண்டியன் வயது 53/2022, இவருக்கு சச்சின் ரமேஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யப்பன் வயது 21/2022,மனைவியுடன் கோவிலுக்கு வந்தார் சாச்சின் வீட்டின் முன்பு அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிகரெட் பிடித்ததாக தெரிகிறது இதன் காரணமாக அய்யப்பனுக்கும் சச்சின் ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டாது. இந்த நிலையில் அய்யப்பன் தலைமையில் 3 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியாது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சச்சின் ரமேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவர் சுயநினைவை இழந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தங்கப்பாண்டியன் ஜெய்யஹிந்துபுர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தெற்கு வாசல் காவல் உதவி ஆணையர் திரு சண்முகம் ஆவர்களின் உத்தரவின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாராணை நடத்தினர் அவர்கள் பாராதியார் ரோடு அய்யப்பன் வயது 21/2022, வீராபாண்டி வயது 24/2022, இளமாறன் வயது 21/2022, என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டனர். இதையடுத்து சச்சின் ரமேஸை கொடூரமாக தாக்கி படுகாயம் ஏற்படுத்திய மேற்கண்ட 3 பேரையும் ஜெய்ஹிந்துபுர போலீசார் கைது செய்தனர்.
![](http://policeenews.com/wp-content/uploads/2022/04/Screenshot_20210704-212238_Photo-Editor.jpg)