Police Department News

மதுரையில் வாலிபர்களுக்கு கத்தி குத்து,தெப்பகுளம் போலீசார் விசாரணை

மதுரையில் வாலிபர்களுக்கு கத்தி குத்து,தெப்பகுளம் போலீசார் விசாரணை

மதுரை 16 கால் மண்டபம் பகுதியில் 2 வாலிபர்கள் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக நேற்று இரவு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிய 2 நபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்கள் சின்ன கண்மாய் நேதாஜி தெருவைச்சேர்ந்தவர் சதீஷ் ராஜா என்ற தக்காளி சதீஷ் வயது 26/2022, விரனூர் ரிங் ரோடு சுரேஷ் மகன் புகழேந்திரன் வயது 19/2022, என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கத்தியால் குத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாநகர காவால் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் மீனாட்சியம்மன் கோவில் போலீஸ் உதவி ஆணையர் திரு. முத்துராசு அவர்களின் ஆலோசனையின் பேரில் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை சின்ன கண்மாய் தக்காளி சதீஷ் நேற்று இரவு காமராஜர் சாலை தூமட்டி ரங்கசாமி ஐயர் சந்து பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆட்டோவை திருட்டுதனமாக எடுத்து சென்றார் இதனை கேள்விப்பட்ட ராமகிருஷ்ணன் என்பவர் தனது கூட்டாளிகள் புகழேந்திரன் மற்றும் காமராஜர் சாலை தூமட்டி ரங்கசாமி சந்து தவசி மகன் பொன்ராஜ் வயது 23/2022, ஆகிய 3 பேருடன் 16 கால் மண்டபம் பகுதிக்கு வந்தனர்.

அங்கு நின்றிருந்த சதீஷூடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் சதீஷை சரமாரியாக கத்தியால் குத்தினர் இதில் பதிலுக்கு அவரும் தன்னிடமிருந்த கத்தியால் சாரமாரியாக குத்தினார் இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழூந்தனர். கூட்டாளிகள் ராமகிருஷ்ணன் பொன்ராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டனர்.மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தெப்பக்குளம் போலீசார் கத்தி குத்து காயமடைந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர்.மற்றும்இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.