Police Department News

மதுரை, கீழ வெளி வீதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது, விளக்குத் தூண் போலீசார் விசாரணை

மதுரை, கீழ வெளி வீதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது, விளக்குத் தூண் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் B1, காவல் நிலைய ஆய்வாளர் திரு. லிங்கபாண்டி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 11 ம் தேதி சரக ரோந்துப்பணியில் ஈடு்டிருந்தார் அப்போது மதுரை கீழவெளி வீதியில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் கையில் கட்டை பையுடன் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்ச்சித்தனர் உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர்கள் மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவிலைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் பரமசிவம் வயது 60/2021, மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பவனம் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் முருகன் வயது 42/2021 என தெரிய வந்தது, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதின் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் RMD பான் மசாலா 25 எண்ணம், கனேஷ் புகையிலை பாக்கெட்டுகள் 17 எண்ணம், மற்றும் பாரீஸ் சிகரெட்டுகள் 10 எண்ணம் இருந்தது, அவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை கைது செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. லிங்கபாண்டி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.