Police Department News

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்


தமிழகத்தில் சில தினங்களாக பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணிப்பது மற்றும் பொது இடங்களில் சண்டையிடுவது போன்ற தகாத செயல்களில் சில மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் ஆசிரியர்களை மதித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு வெளி வீதியில் அமைந்துள்ள ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து துணை ஆணையர். திரு ஆறுமுகச்சாமி மற்றும் உதவி ஆணையர் திரு திருமலை குமார் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் ராம் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்துகளில் பாதுகாப்பாக பயணம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.