Police Department News

மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய போலீசார்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி வந்த இடத்தில் தான் வைத்திருந்த பணம் 7000 ரூபாய் மற்றும் செல்போனை தவற விட்டுள்ளார். பின்பு வழி தெரியாமல் ஊத்துமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல உடன் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் ஒன்று சேர்ந்து தேவையான பணத்தை அவர்களிடம் கொடுத்து அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். மனிதாபிமானத்தோடு செயல்பட்ட காவலர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு. சந்தோஷ் சென்னை

Leave a Reply

Your email address will not be published.