Police Department News

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன், 45. திருமணமாகாதவர். பெற்றோர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.கடந்த, 18ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு, உள்தாழிடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார், வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது, முருகேசன் இறந்துகிடந்தார். அருகில், மின் ஒயர் இருந்தது. மின்சாரம் தாக்கி, இரண்டு, மூன்று நாட்கள் முன்பே, அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.