Police Department News

`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான

`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்நண்பர்களோடு சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தவர் 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். அவர் காட்டிய இடத்தில், புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
நெல்லை லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராம். இவர் கடந்த 5-ம் தேதி டவுன் தொண்டர் சன்னதி அருகில் உள்ள பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற குண்டன், ராமையன்பட்டியை சேர்ந்த ஆசீர்செல்வம் ஆகிய இளைஞர்கள் இருவரும் ஜெயராமை வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
இதுகுறித்து நெல்லை டவுன் காவல் நிலையத்தில் ஜெயராம் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை கைது செய்தார். பிடிபட்ட இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காவல்துறையின் வழக்கமான பாணியில் விசாரணை நடத்தியுள்ளார்
போலீஸ் விசாரணையின் போது மணிகண்டனும் ஆசீர்செல்வமும் பழைய குற்றங்கள் குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளனர். திருட்டு, வழிப்பறி, மிரட்டல், அடிதடி உள்ளிட்டவற்றைச் சொல்லிய இருவரும், கடந்த 2012-ம் ஆண்டு ஒரு பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து கொலைசெய்து புதைத்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
அதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அதுகுறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது, தங்களுடைய நண்பரும் ஆட்டோ டிரைவருமான சிவகுமார் என்பவர் அந்தப் பெண்ணை அழைத்து வந்ததாகக் கூறியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததுடன் கொலை செய்து தச்சநல்லூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் புதைத்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள்
கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகிய இருவரையும் சிறையில் அடைந்தனர். பின்னர் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கை தச்சநல்லூர் போலீஸார் விசாரிக்கத் தொடங்கினார்கள். அந்த சமயத்தில் கொலையில் தொடர்புடைய சிவகுமார் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணையைத் தொடங்கினார்கள்.
பீடி சுற்றும் பெண்ணான புஷ்பா என்பவர், பீடிக்கடைக்கு வரும்போது ஆட்டோ ஓட்டுநரான சிவகுமாருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். ஆனால், சிவகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. அது தெரியாமல் காதலித்த புஷ்பா, அவரைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியிருக்கிறார்
அதனால் அச்சம் அடைந்த சிவகுமார், தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மணிகண்டன், ஆசீர்செல்வம், தியாகு, மாங்கா வெங்கடேஷ் ஆகியோர் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்கள்
அதனால் அச்சம் அடைந்த சிவகுமார், தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மணிகண்டன், ஆசீர்செல்வம், தியாகு, மாங்கா வெங்கடேஷ் ஆகியோர் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்கள்
பெண்ணின் உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோவில் அருகே உள்ள பகுதியில் குழிதோண்டிப் புதைத்து விட்டனர். அதன்பிறகு அனைவரும் எதுவும் நடக்காதது போல் சென்று விட்டனர். சிவகுமார் மட்டும் மும்பை சென்று வேலை செய்து வந்துள்ளார். புஷ்பாவை கொலை செய்தவர்களில் ஒருவரான மாங்கா வெங்கடேஷ் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
பிடிபட்ட சிவாவிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், புஷ்பா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டது. அதில், அவருடைய உடலின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை வட்டாட்சியர் சுப்பிரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரான டாக்டர். செல்வமுருகன் ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொலையான புஷ்பா யார் என்பது குறித்து ஒருவருக்கும் தெரியாததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது
இந்த நிலையில், கொலையான புஷ்பா தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய பெற்றோர் நெல்லை வந்து அவர் குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதனால் சிறையில் இருக்கும் மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் தியாகுவைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.