Police Department News

மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

மேலூர் அருகே வாலிபரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவர் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பட்டியைச் சேர்ந்த தெய்வம் என்பவரது மகன் ராஜ்குமார் வயது-18 என்பவர் மதுரை விரகனூர் தனியார் கல்லூரியில் EEE- முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்

நேற்று வழக்கம்போல் அவரது NS-200 நம்பர் எழுதாத புது பல்சர் இருசக்கர வாகனத்தை கூட்டுறவு பட்டியில் இருந்து மேலூரில் வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து மூலம் கல்லூரிக்கு சென்று திரும்ப மாலை வாகனக்காப்பகத்திலிருந்து பல்சர் வண்டியை எடுத்துக்கொண்டு மேலூரிலிருந்து சென்று கொண்டிருக்கும்போது ஆட்டுக் குளம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதற்கு லிப்ட் கேட்டுள்ளார்கள் மேற்படி ராஜ்குமார் என்பவரும் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்னால் ஏற்றிக்கொண்டு வண்ணாம்பாறை பட்டி கம்மாய் அருகே செல்லும்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மேற்படி ராஜ்குமாரை மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சிவகங்கையை நோக்கி சென்று விட்டார்கள் இது தொடர்பாக ராஜ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு பாலகிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேலூர் வட்டம் காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.