திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். ஆனால் சிலர் […]
வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செங்குளம், நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் TNEB யில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 07.04.2021 அன்று பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது பேரின்பபுரம் அருகே வைத்து அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து 08.04.2021 அன்று […]
திருடு போன 265 செல்போன்கள் மீட்பு மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன. தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் […]