திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியை பிடித்து 30 சவரன் நகையை மீட்டு திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்திய வனப் பணியை பற்றி தெரிந்து கொள்வோம் இந்திய வனப் பணி (அ) இ.வ.ப, (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய ஆட்சிப் பணி (அ) இ. ஆ. ப ஆகும். இ வ.ப பயிற்சி பெற்ற அலுவலர்கள் […]
வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த […]