Police Department News

தென்காசி அருகே குழந்தை பிறந்த 1½ மாதத்தில் இளம்பெண் தற்கொலை

தென்காசி அருகே குழந்தை பிறந்த 1½ மாதத்தில் இளம்பெண் தற்கொலை

தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆய்குடி போலீசார் ரம்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ரம்யா குழந்தை பெற்றதில் இருந்து சற்று மனதளவில் பாதிப்படைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார்.
இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்க்குமாறு கூறி அவரது கணவர் ரம்யாவை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ரம்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடிவடையாத காரணத்தினால் தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published.