Police Department News

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன், குற்றவாளி கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.