Police Department News

மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை

மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை

மேலூர் கொடுக்கம்பட்டி அருகே உள்ள சொக்ககிழவன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி காளை இவரது மனைவி நெவ்வாயி இவருக்கும் கோட்டை வேங்கம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் மமகன் இளையராஜா வயது 40 என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது இந்நிலையில் இளையராஜா என்பவர் ஆண்டி காளை வீட்டில் அவரது மனைவி நெவ்வாயி என்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ஆண்டிக்காளை அருவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்
சம்பவம் அறிந்த கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் மற்றும் மேலூர் DSP அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்டு இறந்த இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் எதிரியான ஆண்டி காளையை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.