Police Department News

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 51 லட்சம் பணத்தை வருமான வரிதுறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிற்கார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனையிட்டனர்

அதில் சந்தேகிக்கும் வகையில் நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில் அவற்றில் ரூ. 51 லட்சத்து 500 உரிய ஆவணங்களின்றி இருப்பது தெரிய வந்தது.

அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த வெங்கட சந்தீப்குமார் வயது 36/22, என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலிசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.