மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
சிறார் ஆபாச படம்- 2 இளைஞர்கள் கைது! சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இளைஞர் ஹரீஷை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகாரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் இ நியூஸ் […]
காரிமங்கலம் அருகே 750 கிலோ குட்கா பறிமுதல் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில் நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்களின் தகவலின் பெயரில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர், சோதனையில் காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரிமங்கலம் […]
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது 11.10.2020 இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை முறையாக புலனாய்வு செய்து வழக்கு நாட்குறிப்பு எழுதுவதில் சிறப்பாக செயல்பட்ட பரமக்குடி காவல் துணை […]