Police Department News

உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி

உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி

இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய திடீர்நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் திடீர்நகர் காவல் உதவி ஆணையர் திரு. ரவீந்திரபிரசாத் அவர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.