Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். வெள்ளை மணியுடன் சென்றவர்கள், அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் ஹரிஹரன் (20), அவரது சகோதரர் வினோத்குமார் (21) மற்றும் சரண் என்பது தெரியவந்தது. அருள்தாஸ்புரம், வைகை வடகரை பகுதியில் வெள்ளைமணி உள்பட சிலர் ஒன்றாக மது குடித்தனர். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இதன் காரணமாக அந்த கும்பல் வெள்ளைமணியை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.