Police Department News

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை புது ஜெயில் ரோடு, ராம் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனியார் மில் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலாவதி (வயது 68). இவர்கள் இதற்கு முன்பு கீழ வைத்தியநாதபுரம் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சரஸ்வதியின் மகள் அங்கு தூக்கு போட்டு இறந்தார். எனவே சுப்பையா அந்த வீட்டை காலி செய்து விட்டு, புது ஜெயில் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இருந்த போதிலும் சரஸ்வதி தினமும் காலை கீழவைத்தியநாதபுரம் வீட்டுக்கு சென்று, அங்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நேரமாகியும் சரஸ்வதி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழவைத்தியநாதபுரத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.