Police Department News

இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் 199 எஸ்.ஐ.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.

சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 2008ல் நேரடி எஸ்.ஐ.,க்காக 776 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சட்டம் – ஒழுங்கு பிரிவில் இவர்கள் பணியாற்றியதால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பின் கடந்தாண்டு முதல் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 200 பேருக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், 199 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வுக்கான பட்டியலை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டார்.காலி பணியிடங்கள், புதிய பணியிடங்களின்படி இவர்கள், இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.