Police Department News

ரவுடி தலை துண்டித்து கொலை சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ரவுடி தலை துண்டித்து கொலை சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்த ரவுடி முத்துபாண்டி 42, தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்தவர் முத்துபாண்டி 42. ரவுடியான இவர் திருவாடானையில் இருந்து செங்கமடை செல்லும் வழியில் வயல்காட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி, கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.

டி.எஸ்.பி., நிரேஷ், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் மகாலிங்கம் 24, இவரது அண்ணன் நெப்போலியன் 29, புதுக்கோட்டை மாவட்டம் கரூரை சேர்ந்த 17 வயது சிறுவன், கடம்பாகுடி காலனியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட முத்துபாண்டியும் கைதானவர்களும் நண்பர்கள். கஞ்சா விற்று வந்தனர். 2010ல் திருவேகம்புத்துார் அருகே டிராக்டர் டிரைவர் கொலை வழக்கில் முத்துபாண்டி கைதானார். மகாலிங்கம் தான் போலீசில் காட்டி கொடுத்ததாக முத்துபாண்டி நினைத்ததால் அவர்களுக்குள் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கம் அண்ணன் நெப்போலியனை முத்துபாண்டி அரிவாளால் வெட்டினார்.

இந்த முன்விரோத்தால் நான்கு பேரும் சேர்ந்து முத்துபாண்டியை கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.