Police Department News

காரிமங்கலம் அருகே தாபா ஓட்டலில் பணம் திருட முயன்ற வாலிபரை பிடித்து ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காரிமங்கலம் அருகே தாபா ஓட்டலில் பணம் திருட முயன்ற வாலிபரை பிடித்து ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தர்மபுரி காரிமங்கலம் ஓட்டலில் திருட முயற்சி காரிமங்கலம் அருகே உள்ள மூக்கிலியூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35).. இவர் பேகாரஅள்ளி பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அவர் ஓட்டலை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். ஊழியர்கள் உள்ளே தூங்கி கொண்டு இருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் புகுந்து பணத்தை திருட முயன்றார். அப்போது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ஓட்டல் ஊழியர்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் காரிமங்கலம் காவல்துறையிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். வாலிபர் இதையடுத்து காவல்துறை அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொட்டுமாரணஅள்ளி கொட்டாவூர் பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் மோகன்ராஜ் (25) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.