Police Department News

வரலொட்டியில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவலர் தமிழ்நாடு காவல்துறை காக்கும் உறவுகள் 2017 பேட்ச் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது

வரலொட்டியில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவலர் தமிழ்நாடு காவல்துறை காக்கும் உறவுகள் 2017 பேட்ச் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் வரலொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து முனியாண்டி இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணியான ராஜபாளையத்தில் பணிபுரிந்து வந்தார் கடந்த 13/9/2022 அன்று விடுமுறைக்கு வந்து திரும்ப பணிக்கு இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் செல்லும்போது சாலை விபத்தில் தலையில் காயம் அடைந்ததில் உயிர் இழந்தார் இந்நிலையில் மறைந்த தெய்வத்திரு முத்து முனியாண்டியின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற சக காவலர்கள் காக்கும் உறவுகள் 2017 BATCH என்ற whatsapp குழு மூலமாக 36 மாவட்டங்களில் சுமார் 4850 காவலர்களிடம் திரட்டிய ரூபாய் 15,32,951 நிதியினை முத்து முனியாண்டியின் மகன் பெயரில் ரூபாய்
8,00,000 மற்றும் தாய் தந்தை பெயரில் 4,50,000 ருபாய் தபால் நிலையத்தில் வைப்பு நிதியாகவும் மனைவிக்கு 151951 ரூபாய் தாய் தந்தைக்கு 131000 ரொக்கமாக காவல்துறை நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தெய்வத்திரு முத்து முனியாண்டியின் இல்லத்தில் அவரின் உறவினர் முன்னிலையில் நிதி மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இச்சம்பவம் பொதுமக்களிடையேயும் காவல்துறையினரிடமும் மிகுந்த வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது

Leave a Reply

Your email address will not be published.