Police Department News

ரெயிலில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் சாவு

ரெயிலில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் சாவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துகிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபரின் முகம் மற்றும் உடலில் சிராய்ப்புகள் இருந்தன.

முதற்கட்ட விசாரணை யில் அவர் வடமாநில வாலிபர் என தெரியவந்துள்ளது. ரெயிலில் பயணித்தபோது தவறி விழுந்து வாலிபர் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.