Police Department News

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேடசந்தூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் எங்கள் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 14, 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மகள்கள் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று எனது மகள்கள் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர். பின்னர் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது என் வீட்டின் அருகே வசிக்கும் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விஜயகுமார் (வயது 68) என்பவர் செக்ஸ் தொல்லை கொடுத்து எனது மகள்களை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

இதனால் பயந்த எனது மகள்கள் இதுகுறித்து என்னிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.