பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
வாணியம்பாடி: 4 பெண்களை திருமணம் செய்த பைனான்ஸியர்! – 4வது மனைவியின் மகளிடமும் அத்துமீறிய கொடூரம் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்ட பைனான்ஸியர், 4வது மனைவியின் 10 வயது வளர்ப்பு மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 47). பைனானஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இந்த நபர், இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவர்களைநிறுத்திய, போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தை 27.11.2019 ம் தேதி பார்வையிட்டனர். மேலும் இவர்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் அமைப்பு செயல்படும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும், காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்கள் […]