Police Department News

பொது ஊழியர்களும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 166ம்

பொது ஊழியர்களும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 166ம்

இந்திய தண்டனைச்சட்டம் 1860ன் பிரிவு 166ன் படி ஒரு பொது ஊழியர், பணியாற்றும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வரை முறைகள் உள்ளன. அந்தப் பொது ஊழியர் பிறருக்குத் தீங்கு உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தீங்கு நேரிடும் என்று தெரிந்த பின்னும் அந்த வரைமுறைகளை மீறிச் செயல்படுவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அதெல்லாம் சரி அந்த பொது ஊழியர்கள் என்றால் யார் அவர்கள்
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு 21 ன்படி பொது ஊழியர், என்ற சொல் அடியில் கண்டவர்களை குறிக்கும்.

  1. முப்படைகளிலுள்ள அலுவலர்கள்.
  2. நீதிபதிகள் ஒவ்வொருவரும்
  3. சட்ட பிரச்னை அல்லது வேறு விவகாரங்களை பரிசீலித்தல், அறிக்கை கொடுத்தல் ஆவணத்தை வைத்திருத்தல், உண்டாக்குதல் அதிகார பூர்வமாக்குதல், சொத்துக்களை பொறுப்பேற்றல், நீதி பூர்வமான வேலைகளைச் செய்தல், சத்தியப்பிரமாணம் செய்வித்தல், மொழி பெயர்தல், நீதி மன்றத்தின் ஒழுங்கை நிலை நாட்டல், ஆகியவற்றிற்க்காக நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர், அல்லது அத்தகைய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்.
  4. ஜூரி, அஸகர், நீதிமன்றத்துக்கு அல்லது வேறு பொது ஊழியருக்கு துணை புரியும் பஞ்சாயத்தார்.
  5. Jury (ஜூரி) அரசு நீதி மன்றத்திற்கு அல்லது பொது ஊழியருக்கு துணை புரியும் பஞ்சாயத்தார்.
  6. நீதிமன்றத்தால் ஒரு விவகாரத்தைப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நடுவர்.
  7. தான் ஏற்று இருக்கும் அலுவல் காரணமாக யாரேனும் காவலில் வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.
  8. குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்கள் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்கும், குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட அனைவரும் பொது ஊழியர் ஆவார்.
  9. சொத்தை எடுக்க, விற்றுக்கொள்ள, வைத்திருக்க, செலவீடு செய்யக் கடமைப்பட்ட அலுவலர்.

10 . ஒரு கிராமத்தின், நகரத்தின், மாவட்டத்தின் பொதுக்காரியத்துக்காக வரி விதித்தல், அளத்தல், மதிப்பீடு செய்தல் அல்லது ஒரு கிராமத்தின், நகரத்தின் அல்லது மாவட்டத்தின் மக்களுடைய உரிமைகளை நிர்ணயிப்பதற்காகத் தேவைப்படும் ஆவணங்களை உண்டாக அல்லது அதிகார பூர்வமாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளவர் ஒவ்வொருவரும்.

  1. தேர்தல் சம்பந்தமான அலுவல் செய்பவரும் பொது ஊழியர் ஆவார்.

12 அரசிடம் பொது ஊழியத்திற்காக சம்பளம் அல்லது சன்மானம் பெறும் ஒவ்வொருவரும் மத்திய மாநில சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்களில்
ஊழியத்திற்காக பணிபுரியும் அனைவரும் பொது ஊழியவர் ஆவார்

Leave a Reply

Your email address will not be published.