Police Department News

போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 2 மாதங்களில் ரூ.7½ கோடி அபராதம் வசூல்

போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 2 மாதங்களில் ரூ.7½ கோடி அபராதம் வசூல்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் வழக்கில் சிக்கிய 7,286 பேர்களிடம் ரூ.7.54 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துகள் ஏதாவதை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

அதன்படி அபராதம் செலுத்தாத 359 பேர்களிடம், கோர்ட்டில் உரிய ஆணை பெற்று அவர்களது அசையும் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.